திருப்பரங்குன்றம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை அழகுசுந்தரம் நகர்ப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து காவல்துறை தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொண்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் குறிப்பிட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.
கொலையுண்ட நபர் குறித்து காவல்துறை விசாரித்ததில், முத்துப்பட்டியைச் சேர்ந்த திராவிட செல்வம் 45 என்பது தெரியவந்தது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து காவல்துறைக்குத் தெரியவரவில்லை. மதுபோதை தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


