விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏத்தாப்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பொக்லைன் உரிமையாளர் கொலை

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பொக்லைன் இயந்திர வாகன உரிமையாளர், கள்ளக்காதல் விவகாரத்தில், கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image

கள்ளக்காதல் விவகாரத்தில் பொக்லைன் உரிமையாளர் கொலை

Updated On :22 ஜூன் 2020, 12:32 pm

DIN

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பொக்லைன் இயந்திர வாகன உரிமையாளர், கள்ளக்காதல் விவகாரத்தில், கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரது பிரேதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம், ஆலமரத்துப் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சதாசிவம் வயது (40). இவருக்கு என்ற பரிமளா (35) என்ற மனைவியும், தனசீலன் (13), அபிரஞ்சிதன்(10) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனங்கள் உரிமையாளரான சதாசிவம், ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து மாயமானார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை, அதே பகுதியில் நீரோடை  பாலத்திற்கு, கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு, உடல் முழுதும் காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட  நிலையில் பிணமாகக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர்  காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வாழப்பாடி சுப்பிரமணியம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொலையுண்ட சதாசிவத்தின் பிரேதத்தைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சதாசிவத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதில் ஆத்திரமடைந்து சதாசிவத்தை செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்து வரவழைத்து, இவரது கைகள் மற்றும் கால்களை இரும்பு கம்பியால் கட்டி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

கொடூரமாகத் தாக்கி கொலை செய்த, கள்ளக்காதலிகள் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடித்து, ஏத்தாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.