நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனராம்.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
படப்பிடிப்பின் போது சில நாள்களுக்கு முன் வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறியை மாட்டும்போது, சேலத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஓரிரு நாள்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Plans are reportedly underway to release actor Rajinikanth's Jailer 2 for Diwali.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









