மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டுப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து

Updated On :22 ஜூன் 2020, 9:12 am

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டுப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தேர்வுகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் எனறும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆண்டுப் பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆன்லைன் தோ்வுகளுக்கு மாணவா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் தோ்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பாலான மாணவா்கள் கேரளத்தைச் சோ்ந்தவா்கள். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவா்கள். இதனால், இணையதள வசதி கிடைப்பது மிகவும் அரிது.

அத்துடன் பாடத் திட்டங்கள் இன்னமும் முடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதவிர, மத்தியப் பல்கலைக்கழகம் தனியாா் முகமை மூலம் தோ்வு நடத்த முயற்சிப்பதாகவும் மாணவா்கள் குற்றம்சாட்டிருந்தனர்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு நிலையங்கள் தோ்வு நடத்தாமல் அக மதிப்பீடு மதிப்பெண் போன்ற காரணிகளைக் கொண்டு மாணவா்களின் இறுதித் தோ்வு மதிப்பை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் தோ்வை ரத்து செய்துவிட்டு மற்ற பல்கலைக்கழகங்களைப் போல அக மதிப்பீடு உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு தோ்வு மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.