வாழப்பாடி தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம்
வாழப்பாடி அருகே வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரைத் தங்கவைக்க முத்தம்பட்டி தனியார் மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரைத் தங்கவைத்து, கரோனா பரிசோதனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடி அருகே முத்தம்பட்டி தனியார் மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திரும்பி வருவோரின் எண்ணிக்கையும், கரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. எனவே, வெளிமாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் வாழப்பாடி பகுதிக்கு வருவோரைக் கண்டறிந்து, சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்புவதற்கு வசதியாக, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து வருவோருக்கு சளி மாதிரி எடுத்தபிறகு, பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்காக, வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தல் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், தனியார் கல்லூரியை புதன்கிழமை பார்வையிட்டு, முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இன்று வியாழக்கிழமை முதல் இந்த மையத்தில், வெளியூரிலிருந்து வருவோரை, கரோனா பரிசோதனை முடிவு வரும்வரை தங்க வைக்கவும், தொற்று உறுதி எனத் தெரியவந்தால் சிகிச்சைக்காக சேலம் அல்லது ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், இல்லை என உறுதியான பிறகே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும் சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...