அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அந்தியூர் வனப்பகுதியில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

அந்தியூர் உள்பட 3 வனச்சரகங்களில் வன விலங்குகளைக் கணக்கெடுக்க வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
அந்தியூர் வனப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள்.
Updated On :25 ஜூன் 2020, 9:47 am

DIN

அந்தியூர் உள்பட 3 வனச்சரகங்களில் வன விலங்குகளைக் கணக்கெடுக்க வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் மற்றும் சென்னம்பட்டி வனச்சரகங்களில் அதிகளவில் யானைகள், மான்கள், காட்டுப்பன்றி, கரடி மற்றும் காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், வனப்பகுதிக்குள் நடமாடும் விலங்குகளை கண்காணிக்கத் தானியங்கி கேமரா பொருத்தும் பணி மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. 

அந்தியூர் வன அலுவலர் உத்திரசாமி மேற்பார்வையில், அந்தியூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட 11 காவல் சுற்றுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணியில் 45 வன அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோன்று, பர்கூர் மற்றும் சென்னம்பட்டி வனச்சரகத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று வனச்சரகங்ளிலும் சேர்த்து மொத்தம் 190 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதில் 75-க்கும் மேற்பட்ட வன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் யானைத் தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலக இயற்கை நிதியகம் மற்றும் வனத்துறை இணைந்து இப்பணியைச் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.