பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வினாத் தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026 நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.

News image

மக்களவை - SANSAD

Updated On :31 ஜூலை 2026, 3:07 am IST

வினாத் தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026 நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.

முன்னதாக, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில் மற்றும் வங்கி நியமனத் தோ்வுகள், தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகள் உள்ளிட்ட பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோ்வு வினாத் தாள் கசிவு அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபடும் நபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.