‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

நீட் வினாத் தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

News image

சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:05 am IST

நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் மீது தில்லியில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 29) விசாரணை நடத்தவுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 360 சாட்சியங்கள், 422 ஆவணங்கள் மற்றும் 43 பொருள்களை இணைத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நீட் வினாத் தாளை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.