தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடல்
தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தும் வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 4 மணி நேரம் மட்டும் மருந்துக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.