அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திராட்சைத் தோட்டம்!

அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

News image
அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திராட்சை செடிகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
Updated On :25 ஜூன் 2020, 10:48 am

ஏ. ராஜுசாஸ்திரி

அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இப்பகுதியில் இயற்கை முறையில் திராட்சைத் தோட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஓசூரிலிருந்து 300 திராட்சை செடிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

காலியாக உள்ள நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்க 300 குழிகள் தோண்டப்பட்டு, செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் திராட்சை செடிகளை நட்டனர். இயற்கை உரம், மண்புழு உரம், செம்மண் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இயற்கை முறையில் திராட்சை செடி வளர்க்கப்படுகிறது.

இதுகுறித்து, அந்தியூர் செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி கூறுகையில், 

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் காலியாக உள்ள இடத்தில் இயற்கை முறையில் திராட்சைத் தோட்டம் அமைக்க முடிவு செய்து இன்று 300 திராட்சை செடிகள் நட்டு வைக்கப்பட்டது. இயற்கை முறை பராமரிப்பின் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்யலாம்.

காலியாக உள்ள இடங்களில் ஆடாதொடை, கரிசலாங்கண்ணி, துளசி, நிலவேம்பு உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் ஓரிரு நாளில் நடவு செய்யப்படும். மேலும், பேரூராட்சி அலுவலக கட்டடத்தின் மேல்பகுதியில் இயற்கை முறையில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்டவை கொண்டு மாடி காய்கறித் தோட்டம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.