மானாமதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மானாமதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய அரசு உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார், மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், காங்கிரஸ் நகர்த் தலைவர் எம்.கணேசன், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.சி..சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி வட்டார மற்றும் நகர்த் தலைவர்கள் கரு.கணேசன், ஆரோக்கியதாஸ், செந்தில்குமார், மாரிமுத்து, கதிரேசன்,துரை நாகராஜ், மலைச்சாமி, நடராஜன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...