தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மண்டலாபிஷேக  பூஜைகள் நிறைவு

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகள் இன்று நிறைவடைந்தன.

News image
Updated On :1 மார்ச் 2020, 8:41 am

DIN

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகள் இன்று நிறைவடைந்தன.

தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப்.5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிப். 6 ஆம் தேதி மண்டலாபிஷேகம் தொடங்கியது. தொடர்ந்து 24 நாள்களாக நடைபெற்று வந்த மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் சனிக்கிழமை இரவு தொடங்கின. நடராஜர் சன்னதி அருகே அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தொடங்கிய முதல் கால யாக பூஜை பூர்ணாஹூதியுடன் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவு பூஜைகளை முன்னிட்டு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.