பூமாலை அருகே வனவிலங்கு விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியானார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவனின் விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வழியாக விவசாய நிலத்திற்கு திங்கள்கிழமை இரவு சென்ற சந்தோஷ் என்பவர் மின் வேலியில் சிக்கி பலியானார். உடலை கைப்பற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.