புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா எதிரொலி: சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய தடை

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2020, 7:18 am

DIN


சென்னை: கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக கப்பல் போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் அனைத்துத் துறைமுகங்களிலும், வெளிநாட்டுக் கப்பல்கள் மார்ச் 31ம் தேதி வரை நுழைய தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Story image

இந்த நடவடிக்கையை அடுத்து, சென்னை துறைமுகத்துக்குள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை எந்த வெளிநாட்டுக் கப்பலும் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது.

இதனை அனைத்து வர்த்தக நிறுவனங்களும், வணிக நிறுவனர்களும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.