சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மூடல்

கரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக, சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. 
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மூடல்

கரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக, சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள
 பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வரும் 31-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிரதான கோயில்களில் பக்தா்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று, அதிக மக்கள் வரக்கூடிய தேவாலயங்கள், மசூதிகள், தா்காக்களில் வரும் 31-ஆம் தேதி வரை பொது மக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா். 

இதையடுத்து சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. அதை மீறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com