ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரத்தில் மருத்துவர்களுக்கு கரோனா பரவாமல் இருக்க நூதன கருவிகளுடன் அறை

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பாகமாக நெகடிவ் ஃப்ரசர் ஐசோலேஷன் அறைகள் அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News image
கோப்பு படம்
Updated On :25 மார்ச் 2020, 10:08 am

DIN

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பாகமாக நெகடிவ் ஃப்ரசர் ஐசோலேஷன் அறைகள் அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் கரோனா தொற்று நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருவதை ஒட்டி மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் புதிய யுக்தி ஒன்றை கடைபிடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

அம்மருத்துவமனையில் கரோனா பிரிவில் பணியாற்றி வந்த ஒரு இளம் மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த புதியமுறை கடைபிடிக்க முடிவு செய்தது.
 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூச்சுகாற்று வெளியில் சென்று மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுத்தி வருவதால், அவர்களின் மூச்சுகாற்றை சுத்தப்படுத்தி வெளியில் விடும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

இதற்காக புதியதாக ஒரு ஐசோலேஷன் அறைகளை கட்டி வருகிறது. அதில் 8 தனி அறைகள் உள்ளது. இந்த அறைகள் இரும்பு தடுப்புகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெப்பா பில்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பில்டர்கள் கரோனா நோயாளிகள் வெளியில் விடும் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து அதில் உள்ள வைரஸ் கிருமிகளை கொன்று நல்ல காற்றை வெளியே அனுப்பும் வசதி கொண்டது.

இதற்காக ரூ1.30 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் இந்த அறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதால், இந்த தொற்று மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.