6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000க்கு மேல் அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2020, 12:56 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டினர் 5 பேர் கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை உட்பட பல இடங்களுக்கு சென்று வந்தனர். அவர்களை பிடித்து, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோட்டை ஒருவருக்கும், தில்லி மசூதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வந்த ஈரோட்டை சேர்ந்த இருவர் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 

அதேநேரம் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 58 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன. அவற்றின் முடிவு தெரியவில்லை. இதனிடையே இவர்களுடன் தொடர்பில் இருந்த, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 1,696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஜானகியம்மாள் லேஅவுட் பகுதியில், 60 பேர், பூர்ணம்பிள்ளை தோட்டம் பகுதியில் 250, ரயில்வே காலனி பகுதியில் 200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர தாங்களாக முன்வந்தும், தகவல்களின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தியும், சிகிச்சைக்கும் அனுமதித்துள்ளனர்.

புதிய தொற்று உள்ளோர் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.