6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத பொதுமக்கள்

தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News image
Updated On :28 மார்ச் 2020, 1:06 pm

DIN

தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள்பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்தொற்று பரவலைத் தடுக்கும் வரையில் பொதுமக்கள் சமூக விலகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, தாராபுரம் உழவர் சந்தையில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்தும்வகையிலும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் என்.சி.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் ஆகியன சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் குறியீடு செய்யப்பட்டுள்ள கட்டங்களில் நின்று கொண்டு வரிசையாக இடைவெளி விட்டுச் சென்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்டில் காலை 6 மணி முதலே அதிக அளவிலான பொதுமக்கள் காய்கறி வாங்கத் திரண்டனர். இதனால் கடைகளில் ஒருவருக்கு ஒருவர் சமூக விலகலைக்கடைபிடிக்கவில்லை.மேலும்,வியாபாரிகள், பொதுமக்கள் முகக் கவசம் இல்லாமலும் இருந்துள்ளனர். 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாருக்குப் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கூடுதல் காவல் துறையினரைப் பணியில் அமர்த்தி விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.