முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வடமாநிலங்களில் இருந்து வேலூருக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு

ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து வேலூருக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்பில் ஆழந்துள்ளனர். 

News image
வேலூர்
Updated On :28 மார்ச் 2020, 11:24 am

DIN

ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து வேலூருக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்பில் ஆழந்துள்ளனர். 

வாடகை தர இயலாத நிலையிலுள்ள தங்களிடம் விடுதி உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்துவதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிற மாவட்ட, மாநிலங்கள், நாடுகளில் இருந்து நோயாளிகளுடன் வரும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள விடுதிகளில் வாடகைக்கு அறைகள் எடுத்து தங்குகின்றனர்.

பின்னர், சிகிச்சை முடிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்வது வழக்கம். இதன்படி, ஜார்கண்ட், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்த நிலையிலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையில் போதிய பணம் இல்லாமல் தவிக்கும் அவர்க ளிடம் விடுதி உரிமையாளர்கள் வாடகைக்கு கேட்டு வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜி.எஸ்.இக்பால் தலைமையில் பாதிக்கப் பட்டுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு உத்தரவால் சிகிச்சை முடிந்தும் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமலும், கையில் போதிய பணம் இல்லாமல் உணவுக்கும், விடுதி வாடகை கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறோம்.  அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவோ அல்லது உணவு, விடுதி வாடகைக்கு தேவையான நிதியுதவி அளிக்கவோ வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 அதற்கு பதிலளித்த ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், சிகிச்சை முடித்து ஊர்திரும்ப முடியாத பிற மாநிலத்தவர்களுக்கு நிதியுதவி செய்து தரஇயலாது. ஆனால், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை விடுதிகளில் வாடகையின்றி தங்கிக் கொள்ளவும், அதுவரை அவர்களுக்கு இலவசமாக உணவு, குடிநீர் வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துதரப்படும் என உறுதியளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.