மணப்பாறையில் பள்ளி மைதானத்துக்கு காய்கறி சந்தை இடமாற்றம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்று வந்த மொத்தம் மற்றும் சில்லறை வணிக காய்கறி மார்கெட் பொதுமக்களின் சமூக இடைவெளிக்கு சவாலாக இருந்ததையடுத்து,
மணப்பாறையில் பள்ளி மைதானத்துக்கு காய்கறி சந்தை இடமாற்றம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்று வந்த மொத்தம் மற்றும் சில்லறை வணிக காய்கறி மார்கெட் பொதுமக்களின் சமூக இடைவெளிக்கு சவாலாக இருந்ததையடுத்து, மார்கெட் மஞ்சம்பட்டி அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்றிலிருந்து புதிய இடத்தில் மார்கெட் நடைபெறும் வகையில் அங்கு சமூக இடைவெளிக்கான வட்டங்கள் வரையப்பட்டு காய்கறி விற்பனை தொடங்கியது. இந்நிலையில் பழைய காய்கறி மார்கெட் வியாபாரிகள் புதிய இடமாற்றத்திற்கு ஒத்தழைப்பு அளிக்காமல் அங்கேயே வியாபாரம் செய்ய தொடங்கினர். 

இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யாசெந்தில்குமார், வட்டாட்சியர் தமிழ்கனி, காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் கடைகளை அப்புறப்படுத்தி புதிய இடத்திற்கு செல்ல வலியுறுத்தினர். 

கடைகள் அனைத்தும் பழைய இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு புதிய இடமான பள்ளி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு இன்று முதல் காய்கறி மார்கெட் நடைபெற தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com