

சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதற்கு மத்திய குழு பாராட்டி உள்ளது.
சிறப்பு கண்காணிப்பு குழு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு பணிகளை செய்து வருகிறது. அர்ப்பணிப்போடு அரசு செயல்படுகிறது. சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
55% வசதிகள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.