கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை திறக்கப்படும் மதுபானக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி தகவல்

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 மே 2020, 7:51 am

DIN

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை திறக்கப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நாளில் கடும் கூட்டம் கூடியதால் தமிழக காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மேலும், மதுபானக் கடைகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 முதல் 3 மணி வரையிலும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மதுபானம் விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.