நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஓமலூரில் மதுபானம் வாங்க அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் கிராமத்தில் அருகருகே மூன்று மதுக்கடைகள் அமைந்துள்ளன

News image
Updated On :7 மே 2020, 11:42 am

DIN

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் கிராமத்தில் அருகருகே மூன்று மதுக்கடைகள் அமைந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இந்தக் கடைகளுக்கு மது வாங்க வந்தவர்களுக்கு டோக்கன்கள் காமலாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனால் அரசு பள்ளி அருகே 200க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் காமலாபுரம் கிராம மக்கள்  மது வாங்குவதற்கு அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அரசுப் பள்ளியில் டோக்கன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 

புறவழிச் சாலையில் உள்ள மதுக்கடைக்கு அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கிராமத்தில் அரசுப்பணியில் டோக்கன் வழங்க முயன்ற சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.