கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் சீல் அகற்றம்

தில்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்றுவந்த மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து

News image
Updated On :7 மே 2020, 1:02 pm

DIN

தில்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்றுவந்த மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 06.04.2020 அன்று அவர் பணிபுரிந்து வந்த அனல்மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணியால் சீல் வைக்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்த பொறியாளர் குணமடைந்து வீடு திரும்பியதால் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று சீல் வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையின் சீலை பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி அகற்றினார். 

கட்டுப்பாட்டு அறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் பணி துவங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.