எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விழுப்புரத்தில் கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

News image
Updated On :18 மே 2020, 9:35 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தடை மே 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்த நிலையில், கரோனா சற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு தடை நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அத்தியாவசிய கடைகள் தனிக்கடைகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 34 வகையான நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. எனினும் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. ஏசி பயன்படுத்தாத பெரிய நிறுவனங்களும், கடைகள் திறக்கப்பட்டு இயங்கின. வாகன பணிமனைகள், பழுது நீக்கும் மையங்கள் அதற்கான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், பல்வேறு வகையான கடைகள் திறக்கப்பட்டு கரோனாவுக்கு முந்தைய பழைய இயல்பு நிலைக்குக் கூட்டம் திரும்பி இருந்தது.

அரசு அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்குவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டன. முக்கிய அரசு அலுவலங்களில் பெரும்பாலான பணியாளர்கள் வந்திருந்தனர். பொது போக்குவரத்து,திரையரங்குகள் தவிர வழக்கமான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கூட்டநெரிசல் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.