சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், திருநெல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் 23 கர்ப்பிணிகளுக்கும், எழும்பூர் தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் 34 கர்ப்பிணிகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 42 பேருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...