தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா தொற்று: 14 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். இதன்படி தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் 87.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 400 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,282 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 12,100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,55,893 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதில், சென்னையில் அதிகபட்சமாக 567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...