தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 2,000-ஐ கடந்தது; 5 மண்டலங்களில் 6 ஆயிரம் பேருக்கு கரோனா

சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 மே 2020, 5:34 am

DIN

சென்னை:  சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 2,065 ஆகவும், கோடம்பாக்கத்தில் 1,488 ஆகவும், திருவிக நகரில் 1,253 ஆகவும் உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 5,331 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 5,643 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

திங்கள்கிழமை பதிவான கரோனா உயிரிழப்புகளில் 7 பேரில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

Story image

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது ஆண், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயது ஆண் மற்றும் 68 வயது ஆண், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 75 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயதுப் பெண் ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். 

சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களில் மட்டும் 6,000 -க்கும் அதிகமானோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.