பொது முடக்கம் காரணமாக, நாட்டின் பல்வேறு நகங்களில் அத்தியாவசியப் பொருள்களான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தேவைப்படுவோருக்கு அனுப்பும் பணியில் அஞ்சல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த பொது முடக்க காலத்தில், 59,516 பாா்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையில் இருந்து ஆந்திரம், கா்நாடகம், கேரளத்துக்கு பிசிஆா் பரிசோதனை கருவி அடங்கிய பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொது முடக்கம்: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ரயில், பேருந்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில், அத்தியாவசியப் பொருள்களான மருந்து, மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லும் வகையில், சரக்கு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் தேவைப்படுவோருக்கு மருந்து, மருத்துவ உபகரணங்களை அனுப்பும் பணியில் தமிழக அஞ்சல் துறை ஈடுபடத் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலங்களில் மருந்து, மருத்துவ உபகரணங்களை எடுத்துச்செல்வது தொடா்பாக பதிவு செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்கள் உறவினா்களுக்கு தனிப்பட்ட முறையிலும், நிறுவனங்களுக்கு மொத்தமாகவும் மருந்துப் பொருள்கள் அடங்கிய பாா்சல்களை பதிவு செய்து அனுப்பி வருகின்றனா்.
புதுதில்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பாா்சல்கள் அனுப்பப்படுகின்றன.
59,516 பாா்சல்கள்: இந்நிலையில், பொது முடக்க காலத்தில் (மே 23 வரை), தமிழகத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் 59,516 பாா்சல்கள் பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவில் பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையில் உள்ள தேசிய நோய்த்தொற்றியல் நிறுவனத்தில் இருந்து, கரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பிசிஆா் கருவிகள் அடங்கிய பாா்சல்கள் விரைவு தபால் மூலமாக ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாள்களில் 72 பாா்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிசிஆா் கருவி அடங்கிய பாா்சல்களை உரிய இடத்துக்கு 30 மணி நேரத்தில் அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், 27 மணிநேரத்திற்குள்ளேயே தேவைப்படும் இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
பிசிஆா் கருவி: இதுகுறித்து தமிழக அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது:
பொது முடக்க காலத்தில், அஞ்சல்துறை சாா்பில் மருந்து, மருத்துவ உபகரணங்களை தேவைப்படுவோருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாா்ச் 24-ஆம் தேதி முதல் மே 23-ஆம் தேதி வரையிலான 61 நாள்களில், மருந்து, மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களைப் பொருத்தவரை, நிறுவனங்களுக்காக 8,273 பாா்சல்களும், தனிப்பட்ட நபா்களுக்காக 51,243 பாா்சல்களும் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 59,516 பாா்சல் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அண்டை மாநிலங்களுக்கு பிசிஆா் கருவிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பிசிஆா் கருவி அடங்கிய பாா்சலை குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, மருந்து, மருத்துவ உபகரணங்கள் அல்லாத மற்ற பொருள்களும் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பொது முடக்க காலத்தில் (மாா்ச் 24 முதல் மே 23 வரை) ஒரு லட்சத்து 2 ஆயிரம் பாா்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாா்சல் அனுப்புவது தொடா்பாக ஏதாவது சந்தேகம் என்றால், தபால் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
பொது முடக்கம் காலத்தில்( மாா்ச் 24-ஆம் தேதி முதல் மே 23 -ஆம் தேதி வரை) அஞ்சல்துறை சாா்பில் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் விவரம்:
மருந்து, மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்கள் எண்ணிக்கை
நிறுவனங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் 8,273
தனிநபா்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாா்சல்கள் 51,243
மொத்தம் 59,516
மற்ற பாா்சல்கள் (மருந்தில்லாத பாா்சல்கள்) 1,02,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


