திருக்குவளையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் ஒன்றிணைந்து விவசாயிகள் பெற்ற வேளான் கடன்களை


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் ஒன்றிணைந்து விவசாயிகள் பெற்ற வேளான் கடன்களை தள்ளுபடி செய்து குறுவை சாகுபடிக்கு நிபந்தனையின்றி கடன் வழங்கிடக் கோரி மற்றும் இன்சூரன்ஸ் உடனடியாக வழங்கிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டமானது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சமூக இடைவெளியின் படி நடைபெற்றது.
இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய தலைவர் ஏ.செல்லையன் மற்றும் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தனர். முன்னதாக போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் டி.செல்வம் துவங்கி வைத்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.குறுவை சாகுபடிக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்கிட வேண்டும்.
மின்சார சட்டம் 2020ஐ திரும்பப்பெற வேண்டும். குடிமராத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை ஊழல் முறைகேடு இன்றி நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையோடு இணைத்ததைக் கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அவர்களுடைய கோரிக்கை மனு ஒன்றை வட்டாட்சியர் சாந்தியிடம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...