எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
Updated On :30 மே 2020, 7:08 am

DIN


சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளை நிறைவு பெற உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறாா். இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்துவது பற்றியும், எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும் தமிழக அரசு முடிவுகளை எடுக்கவுள்ளது. 

முன்னதாக, பொதுத் துறை உள்ளிட்ட பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முதல்வர் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.