பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மதுபாட்டிலை ஆசன வாயில் திணித்துக் கொண்ட இளைஞர்; அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்

நாகையைச் சேர்ந்த ஒருவர் போதையில் மதுபாட்டிலை தனது ஆசன வாயின் வழியாக செலுத்தியதன் விளைவாக பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுள்ளது.

News image
Updated On :31 மே 2020, 11:44 am

DIN

நாகையைச் சேர்ந்த ஒருவர் போதையில் மதுபாட்டிலை தனது ஆசன வாயின் வழியாக செலுத்தியதன் விளைவாக பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுள்ளது.

நாகையை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி(29). மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர், கடந்த ஓரிரு நாள்களுக்கு தொடர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட மதுபோதையின் காரணமாக, பக்கிரிசாமி காலியான மதுபாட்டில் ஒன்றை தனது ஆசன வாய் வழியே செலுத்தியுள்ளார். இதில், முழு பாட்டிலும் அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இதனால், அவருக்கு வயிறு வீக்கமும், வலியும் அதிகரித்துள்ளது. தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்கள் பக்கிரிசாமியை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், பக்கிரிசாமியின் வயிற்றில் ஒரு பாட்டில் முழுமையாக சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும், மலக்குடலை சுத்தம் செய்யும் இனிமா சிகிச்சையும் அளித்து, அவரது வயிற்றில் இருந்த பாட்டிலை அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.