உடனடி கடன் தரும் செயலிகளிடம் உஷார்: எச்சரிக்கும் காவல்துறை
உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி?
செல்லிடப்பேசி செயலிகள் சில, உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்களை அனுப்புகின்றன. அதை நம்பி சிறிய தொகைதானே என்று கடன் வாங்க நினைக்கும், நபர்களுக்கு உதாரணமாக ரூ.5000 கடன் தொகை கேட்டால், கடன் அளிக்க செயல்பாட்டுக் கட்டணம் என்று ரூ.1,500 பிடித்தம் செய்து வெறும் ரூ.3500 வரவு வைக்கப்படுகிறது. அதனை திரும்ப செலுத்த தாமதமாகும் பட்சத்தில், வட்டி, வட்டிக்கு வட்டி என்று கடன் வாங்கியவரை செயலிகள் மிரட்டத் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல, கடன் வாங்கியவரின் செல்லிடப்பேசியில் இருக்கும் தொடர்பு எண்களையும் தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, செல்லிடப்பேசி செயலிகளிடம் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் சுட்டுரைப் பதிவில், உடனடி லோன் தருவதாகக் கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள்.
போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...