வெள்ளக்கோவில் வட்டமலை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வட்டமலைக் கரை ஓடை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென நீராதாரத் துறை தெரிவித்துள்ளது.
வட்டமலைக் கரை ஓடை அணை
வட்டமலைக் கரை ஓடை அணை

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வட்டமலைக் கரை ஓடை அணை விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென நீராதாரத் துறை தெரிவித்துள்ளது.

நீராதாரம் இல்லாத இடத்தில் வட்டமலைக் கரை ஓடை அணை கட்டப்பட்டதால், கடந்த 30 வருடங்களாக அணை வறண்டே கிடக்கிறது. அரசாணை 84-ன் படி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனக் கால்வாயில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்று உபரி நீரைக் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர். 

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது போக, உபரி நீர் இருக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்யப்படும். தாராபுரம் அமராவதி அணைக்கட்டிலிருந்து நீரை கிராவிட்டி ஸ்கீம் மூலம் கொண்டு வரவும், ஆண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து லிப்ட் இரிகேஷன் மூலம் கொண்டு வரும் கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என ஈரோடு கோட்ட பொதுப்பணித்துறை நீராதார செயற்பொறியாளர் கே.எம்.விஜயா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com