பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிருஷ்ணகிரியில் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி, மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுது நீக்கும் மையங்கள் செயல்படுகின்றன. 

News image
கிருஷ்ணகிரியில் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி, மறியல் போராட்டம்
Updated On :17 நவம்பர் 2020, 5:19 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுது நீக்கும் மையங்கள் செயல்படுகின்றன. 

இத்தகைய நிலையில், சென்னை சாலையில் மையப்பகுதியில் கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையின் மையப்பகுதியில் தடுப்பு அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.

சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இந்தநிலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியதை அடுத்து சென்னை சாலையில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.