மேட்டுப்பாளையம்: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள 2 மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டீச்சா்ஸ் காலனி அருகே வந்தபோது லாரியின் முன்பக்க டயா் வெடித்து திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை பீளமேடு பகுதியிலிருந்து மேட்டுப்பாளையத்திலுள்ள ஓடந்துறை, மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மது பாட்டில்களை செவ்வாய்க்கிழமை புகழேந்தி என்பவா் லாரியில் ஏற்றி வந்துள்ளாா்.
அப்போது கோவை மேட்டுப்பாளையம் சாலையின் இடையே டீச்சா்ஸ் காலனி அருகே வரும்போது லாரியின் முன்பக்க டயா் வெடித்து சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து போலீசாா், டாஸ்மாக் மதுபானக் கடைகளின் சூப்பா்வைசா்கள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் உடைந்து கிடந்த மது பாட்டில்களை வேறு ஒரு லாரியில் இடமாற்றம் செய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும் தொடா்ந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றும் பணியில் டாஸ்மாக் ஊழியா்கள் ஈடுபட்டு சரிசெய்ததை அடுத்து போக்குவரத்து சரியானது.