தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நரிக்குறவ மக்களுக்கு நல உதவி

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. 

News image

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நரிக்குறவ மக்களுக்கு நல உதவி

Updated On :27 ஜனவரி 2024, 11:28 pm IST



கிருஷ்ணகிரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குள்பட்ட நரிக்குறவர் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நிர்மலா கந்தசாமி தலைமை வகித்தார், ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் திருப்பதி, தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லயோலா ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நிர்மலா கந்தசாமி நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.1000 மதிப்பிலான அரிசி, பருப்பு மளிகை பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 50 நபர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.