மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூர் அருகே விவசாயத் தொழிலாளி, மகள் கழுத்தறுத்து கொலை: காவலர்கள் தீவிர விசாரணை

வேலூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளியும், அவரது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 அக்டோபர் 2020, 6:11 am

DIN

:

வேலூர்: வேலூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளியும், அவரது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே உள்ள ரஞ்சன்கொட்டாய் கிராமத்தில் அன்ஷர்பாஷா என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் பொன்னுச்சாமி(42). அந்த நிலத்திலுள்ள வீட்டிலேயே அவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை பொன்னுச்சாமியும், அவரது மகள் தீபா(10) ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். 

இதனை பார்த்த அந்த பகுதியினர் வேப்பங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவலர்கள் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் காவல் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.