கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

தேவை எச்சரிக்கை: சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியது

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,110 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News image
தேவை எச்சரிக்கை: சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியது
Updated On :8 அக்டோபர் 2020, 6:52 am

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,110 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகபட்சமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா 1,300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிக நகர், அடையாறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனாவுக்கு பலியானோரில் தேனாம்பேட்டையில்தான் அதிகளவாக 427 பேர் பலியாகியுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

அதேபோல், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.

எனினும் தற்போது சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் வரை 10 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கரோனா பாதித்ததில் இதுவரை 1.60 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 3,336 பேர் பலியாகிவிட்டனர். 13,110 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மண்டல வாரியாக பாதிப்பு நிலவரம்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.