தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க முடியாது

நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :12 அக்டோபர் 2020, 7:30 pm

DIN

சென்னை: நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த எஸ்.பாா்த்திபன் என்பவா், கிண்டி போலீஸாரிடம் கொடுத்த புகாரில், ‘தி.மு.க. எம்எல்ஏவும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் சில போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளனா். சிட்கோ நிறுவனம், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு கடந்த 1959-ஆம் ஆண்டு குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கியது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கடந்த 2011-ஆம்ஆண்டு வரை மேயராக இருந்த மா.சுப்பிரமணியன், கே.எஸ்.கண்ணனின் மகள் காஞ்சனா என போலி ஆவணத்தை தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தயாரித்துள்ளாா். பின்னா், காஞ்சனாவுக்கு அந்த நிலத்தை வழங்கும்படி எஸ்.கே.கண்ணன் கடிதம் கொடுத்ததாகக் கூறி, இந்த நிலத்தை மா.சுப்பிரமணியம் அபகரித்துள்ளாா். ஆனால், மா.சுப்பிரமணியனின் மனைவி காஞ்சனாவின் கடவுச்சீட்டில் அவரது தந்தை பெயா் சாரங்கபாணி என உள்ளது. எனவே, போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை கையகப்படுத்திய குற்றத்துக்காக மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியிருந்தாா். இந்தப் புகாா் குறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

வழக்கை விசாரித்த எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்கக் கோரியும் மா.சுப்பிரமணியன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக மா.சுப்பிரமணியனுக்கு விலக்களிக்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிட்டாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராவது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டாா். வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.