இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார்

நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

News image
நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார்
Updated On :15 அக்டோபர் 2020, 8:16 am

DIN

மதுரை: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு அண்மையில் பாஜகவில் இணைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சி என விமர்சனம் செய்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.