7.5% உள்ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வார அவகாசம் தேவை: ஆளுநர் பதில்

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக ஆளுநர் பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக்கோணங்களிலும் கலந்தாலோசனை  நடத்தி வருகிறேன். இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது.” என்று ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதாக தன்னை சந்திக்க வந்த தமிழக அமைச்சர்களிடம் ஆளுநர் தெரிவித்ததாகவும் செய்திகள் உலவுவதாக திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com