மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேனியில் புகையிலை பொருள் பதுக்கல் வழக்கில் காவலர் கைது

தேனியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஆயுதப் படை, மோப்ப நாய் பராமரிப்பு பிரிவு தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.

News image
ஆயதப் படை, மோப்பநாய் பராமரிப்பு பிரிவு தலைமைக் காவலர் பிரசன்னா
Updated On :2 செப்டம்பர் 2020, 7:51 am

DIN

தேனியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஆயுதப் படை, மோப்ப நாய் பராமரிப்பு பிரிவு தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.

தேனி, வெங்கலாகோயில் தெருவில் சீனியப்பன் மகன் கணேசன்(50) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,540 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடந்த ஆக.31-ம் தேதி தனிப் பிரிவு காவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தேனி காவல் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருள்களை கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த கணேசன், இதற்கு உடந்தையாக இருந்த தேனி, இடமால் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன்(35), சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜகுரு(38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ராஜகுரு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகையிலை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தேனியைச் சேர்ந்த ஆயதப் படை, மோப்பநாய் பராமரிப்பு பிரிவு தலைமைக் காவலர் பிரசன்னா(35) என்பவரை தேனி காவல் நிலைய காவலர்கள் கைது செய்துள்ளனர். தேனியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் நவரத்தினவேல் என்பவரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.