சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காந்தி சந்தை திறக்க கோரி தடையை மீறி வியாபாரிகள் உண்ணாவிரதம்: 38 பேர் கைது

 காந்தி சந்தை திறக்கக் கோரி தடையை மீறி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 38 பேர் கைது காவலர்கள் கைது செய்தனர். 

News image
திருச்சி காந்தி சந்தை திறக்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்
Updated On :2 செப்டம்பர் 2020, 7:47 am

DIN


திருச்சி:  காந்தி சந்தை திறக்கக் கோரி தடையை மீறி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 38 பேர் கைது காவலர்கள் கைது செய்தனர். 

கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்திலுள்ள காய்கனி சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதேபோல திருச்சி காந்தி சந்தை மூடப்பட்டு தற்போது ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை திறக்க உள்ளது.

ஆனால், திருச்சி காந்தி சந்தை திறப்பு எப்போது என்பது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படவில்லை. தற்போது திருச்சியில் மழை பெய்து வருவதால் ஜி கார்னர் காய்கனி சந்தையில் வியாபாரிகள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

எனெவே காந்தி சந்தையை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி இன்று காலை காந்தி சந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரையும் காந்தி சந்தை காவலர்கள் கைது செய்து அப்பகுதியிலுள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.