மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.1.43 லட்சம் கொள்ளை

தாராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டியும், மிளகாய் பொடியைத் தூவியும் ரூ.1.43 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.

News image
தாராபுரத்தை அடுத்த கவுண்டன் வலசு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை
Updated On :8 செப்டம்பர் 2020, 3:59 am

தினமணி செய்திச் சேவை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டியும், மிளகாய் பொடியைத் தூவியும் ரூ.1.43 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.

தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டன்வலசு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சின்னதுரை என்பவரை மேற்பார்வையாளராகவும், ஈஸ்வரன், சுரேஷ்பாபு ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்த மூவரும் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது வாங்குவது போல் வந்த 2 பேர் அவர்களை கண்காணித்துள்ளனர். இதன் பிறகு திங்கள்கிழமை இரவு 9.30 மணி அளவில் கடையைப் பூட்டி விட்டு புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த 2 பேர்  கத்தியைக் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரையும் மிரட்டியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து ஊழியர்களின் கண்களில் தூவி விட்டு ரூ.1.43 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றனர். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மூலனூர் காவல் துறையினர் டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராம் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.