சென்னை; இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக சு.பிரபாகர், புதன்கிழமை பொறுப்பேற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், அண்மையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பொறுப்புகளை புதன்கிழமை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொறுப்பினை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.