தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மெரினா கடற்கரையை பாதுகாக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
மெரினா கடற்கரையை பாதுகாக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Updated On :10 செப்டம்பர் 2020, 11:26 am

DIN


சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நுரைபொங்கிய விவகாரம் குறித்து விசாரித்து வந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மெரினா கடற்கரைக்கு அருகே கடலில் கலக்கும் அடையாறு உள்ளிட்ட ஆறுகளின் கழிவுகளால் மெரினா கடற்கரையில்  நுரைபொங்குவது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு டிசம்பரில் மெரினா கடற்கரையில் அதிகளவில் நுரைபொங்கியது தொடர்பாக விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.