சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்

கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

News image
சேதமடைந்துள்ள கொடைக்கானல்−பிரகாசபுரம் செல்லும் சாலை
Updated On :11 செப்டம்பர் 2020, 9:08 am

DIN


கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளான,பிரகாசபுரம்,செண்பகனுர்,ரைபிள்ரேஞ்ச் சாலை,பாம்பார்புரம்,டிப்போ"பகுதி, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளது. 

மேலும் இதே பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சேதமடைந்த  சாலைகள் தெரியாத நிலையில் அதில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

எனவே சேதமடைந்த சாலைகளை மாவட்ட நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள்,பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.