எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புரட்டாசி மாதம் தொடக்கம்: கோனேரிப்பட்டியில் பனிக்கட்டியில் வைக்காத மீன்கள் விற்பனை அதிகரிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் புரட்டாசி மாதம் தொடக்கத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். 

News image
சங்ககிரி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள். 
Updated On :13 செப்டம்பர் 2020, 9:50 am

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் புரட்டாசி மாதம் தொடக்கத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். 

தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளதால் மீனவர்கள் ஆற்றில் பிடித்து பனிக்கட்டிகளில் வைக்காமல் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் செப்டம்பர் 17-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குவதையொட்டி, ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 13-ஆம் தேதி கோனேரிப்பட்டியில் வழக்கத்தைவிட மீனவர்கள் அதிகமான கடைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

இக்கடைகளில் சங்ககிரி, எடப்பாடி, தேவூர், அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, கல்வடங்கம் , மூலப்பாதை, மகுடஞ்சாவடி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் பனிக்கட்டியில் பதப்படுத்தப்படாமல் ஆற்றிலிருந்து நேரடியாக பிடித்து தருவதையடுத்து வரிசையில் காத்திருந்து கட்லா, ரோகு, ரூப்செண்ட், ஆரால், ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகளை ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 300 வரை வாங்கிச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மீன்கள் விற்பனையானதையடுத்து மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.