ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேலூரில் 13 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 11,034 ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 15 நாட்களில் 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image

Corona damage exceeds 13,000 in Vellore

Updated On :15 செப்டம்பர் 2020, 12:45 pm


வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 11,034 ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 15 நாட்களில் 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் இம்மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், ஜூலை 13-இல் 3,137, ஜூலை 18-இல் 4,039, ஜூலை 26-இல் 5,138, ஆகஸ்ட் 1-இல் 6,152, ஆகஸ்ட் 7-இல் 7,156, ஆகஸ்ட் 14-இல் 8,129, ஆகஸ்ட் 21-இல் 9,027, ஆகஸ்ட் 26-இல் 10,008, செப்டம்பர் 1-இல் 11,034, செப்டம்பர் 8-இல் 12,067ஆகவும் உயர்ந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,911}ஆக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 197-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 11,567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.